பாக்தாதில், ஒரு வியாபாரி அவன் வீட்டில் தெருவை பார்த்து உட்கார்ந்து இருந்தான். தெருவில், சாமான் வாங்க சந்தைக்கு அனுப்பியிருந்த வேலைக்காரன் ஓடோடி வந்து கொண்டிருப்பதைப் பார்த்தான்.
வந்தவன், "முதலாளி, சந்தையில ஒரு பொம்பளை என்னை இடிச்சிட்டு போனா. திரும்பி பார்த்தா, அது 'சாவு' முதலாளி. அவளும் என்னை முறைச்சிட்டு நின்னாளா. எனக்கு ஒரே பயமாய் போச்சு."
"என்னடா உளர்றே", முதலாளி கேட்டான்.
"உங்களுக்கு புரிய வைக்க எனக்கு நேரம் இல்ல. என் மேல உங்களுக்கு நம்பிக்கை இருந்தா உங்க குதிரைய கொடுங்க. நான் சமார்ராஹ்-கு போய் தப்பிச்சிப்பேன். அதனால என்னைய கண்டு பிடிக்க முடியாது. அப்புறம் நாளைக்கு பார்க்கலாம்.", என்றான் அவன்.
"சரி, எடுத்துட்டு போ."
அவனும் குதிரை மேலேறி, அதை விரட்டிக் கொண்டு போய்விட்டான்.
வியாபாரி சுவாரசியம் தாங்காதவனாய், உடனே சந்தைக்கு ஓடினான்.
கூட்டத்தில் நின்றுக் கொண்டிருந்த என்னை நெருங்கி, "என்ன நீ, என்னோட வேலைக்காரன பார்த்து, கொல்ராப்ல முறைச்சிட்டு நின்னயாமே?".
"நான் ஒண்ணும் முறைக்கலையே. உண்மையில, எனக்கு ஒரே ஆச்சர்யம் தான். அவனை இங்க பாக்தாத்ல பார்ப்பேன்னு கொஞ்சம் கூட நினைக்கலை. அவனை நான் சமார்ராஹ-ல இல்ல இன்னிக்கு சாயங்காலம் சந்திக்கறதா தான் இருந்தது."
இது Jeffery Archer-இன் To Cut A Long Story Short என்ற சிறுகதை தொகுப்பில் இருந்த அரேபிய நாட்டுக் குட்டிக் கதையின் மொழிப்பெயர்ப்பு.
Tuesday, November 3, 2009
Subscribe to:
Post Comments (Atom)
saavu-kku badhil-a maranam-nu use pannalam.
ReplyDelete