Thursday, October 29, 2009

முதல் முதலாய்...

இது வரைக்கும் இல்லாமல் இருந்த எழுதும் ஆசை இப்பொழுது வந்திருக்கிறது. ஆங்கிலத்தில் எழுதும் அளவிற்கு எனக்கு அம்மொழியில் ஆளுமை இல்லை. தமிழில் இருக்கிறதா? என்ற கேள்விக்கு என் புதிய வலைப்பதிவுகள் தான் பதில் சொல்ல வேண்டும். என்னால் தமிழில் ஏகப்பட்ட பிழைகள் இல்லாமல் எழுதுவது கடினம் என்றாலும், நான் யோசிப்பது தமிழில் என்பதால், தமிழில் எழுதப் போகிறேன்.

அடுத்த கேள்வி. எதை பற்றி எழுதுவது? மென் பொருள் தொழில் பழகி என்னுடைய மூளைக்கு பகுத்து ஆராய்கிற திறம் கொஞ்சம் வளர்ந்து இருக்கிறது. கற்பனை வளம் தற்போதைக்கு சுத்தமாகக் கிடையாது. ஆதலால், நான் படித்ததைப் பற்றி எழுதப் போகிறேன். காலம் ஆக ஆக, மற்ற விஷயங்களைப் பற்றியும் எழுத முடியும் என்று நம்புகிறேன். வாசகர்கள் என்னுடைய வலைப்பதிவுகளில் உள்ள எந்தப் பிழையைக் கண்டாலும் பொறுத்து அருளாமல், சுட்டிக் காட்டும்படி வேண்டிக் கொள்கிறேன்.